245 . நான் உனக்கு
E – Maj / 6 / 8 / T – 110
நான் உனக்குப் போதித்து நடக்கும் பாதையை
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே ( காத்திரு மகனே )
உன் மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
1 . ஈசாக்கு விதை விதைத்து
நூறு மடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல்
2 . ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே ( மகளே )
ரெகோபோத் தொடங்கி விட்டது – உனக்கு
3 . தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – மகனே
4 . கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள் – இது முதல்
அநேகர் அறிக்கை செய்வார்கள்
5 . கலங்காதே நான்
உன்னோடு இருக்கின்றேன் மகனே
பலுகிப் பெருகிடுவாய் – தேசத்தில்
6 . உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு –