Back

358 . உன்னதரே 

E – Maj / 4 / 4 / T – 95 

உன்னதரே உம் 

பாதுகாப்பில் வாழ்கின்றேன் – சர்வ 

வல்லவரே உம் நிழலில்தான் 

தங்கியுள்ளேன் 

புகலிடமே அடைக்கலமே 

கோட்டையே நம்பிக்கையே  

1 . பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது 

வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது 

காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே – புகலிடமே 

2 . படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன் 

பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார் 

தீங்கு நிகழாது ( ஒரு ) நோயும் அணுகாது 

3 . வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு 

பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் 

மிதிப்பேன் சிங்கத்தையே நான் 

நடப்பேன் சர்ப்பத்தின்மேல் 

4 . சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர் . 

உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை 

நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே – தலை 

5 . இரவில் வரும் திகிலுக்கு 

நான் பயப்படேன் 

பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன் . 

ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே 

6 . கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால் 

விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு 

நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு 

7 . உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் 

பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே 

நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு

We use cookies to give you the best experience. Cookie Policy