T-110 2/4
நிச்சயமாகவே முடிவு உண்டு 
நம்பிக்கை வீண் போகாது 
1 . கர்த்தரையே பற்றிக் கொள் 
திருவசனம் கற்றுக் கொள் 
அவரே பாதை காட்டுவார் 
அதிலே நீ நடந்திடு 
சோர்ந்து போகாதே , தளர்ந்து விட்டுவிடாதே 
துணிந்து நீ ஓடு , துதித்து தினம் பாடு 
2 . எரிச்சலை விட்டுவிடு 
பொறாமை கொள்ளாதே 
அன்பு உன் ஆடையாகணும் 
வம்புகள் மறைந்து போகணும் - சோர்ந்து 
3 . நாவு நல்லதையே 
நாள்தோறும் பேசினால் 
கர்த்தரின் திரு இருதயம் 
களிகூருமே உன்னாலே 
 
 
                            