T-180 4/4
தேவனே என் தேவா 
உம்மை நோக்கினேன் 
நீரில்லா நிலம் போல 
உம்மைப் பார்க்கிறேன் 
1 . ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் 
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு 
உலகை மறக்கின்றேன்
2 . ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
3 . படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் 
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
 உம் சிறகுகளின் நிழல்தனிலே 
உலகை மறக்கின்றேன் 
4 . எனது ஆன்மா தொடர்ந்து உம்மை 
பற்றிக் கொண்டது 
உம் வலக்கரமோ என்னை நாளும் 
தாங்கிக் கொண்டது . 
5 . வாழ்நாளெல்லாம் உம் நாமம் 
வாழ்த்திப் பாடுவேன் 
சுவையான உணவை உண்பதுபோல் 
திருப்தி அடைகின்றேன் 
 
 
                            