T-86 4/4
உம் பேரன்பில் நம்பிக்கைவைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம்மைப் போற்றிப் பாடுவேன்
ஜீவன் இருக்கும் வரை ஶி- என்
எனக்கு நன்மை செய்தீரே (3)
எப்படி நன்றி சொல்லுவேன் (3)
இயேசய்யா நன்றி ஐயா
இயேசய்யா நன்றி (2)
உயிரோடென்னைக் காக்க
என் மேல் நோக்கமானீர்
வியாதியினின்று மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால் - 2
மிகுந்த செல்வத்தில்
மகிழ்வதைவிட
உந்தன் சமுகத்திலே
மகிழ்ந்திருக்கின்றேன்
பிராணனை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே
கழுகுக்கு சமானமாய்
இளமை புதுப்பிக்கின்றீர்
குற்றம் மன்னித்தீர்
நோய்கள் நீக்கினீர்
கிருபை இரக்கங்களால்
அலங்கரிக்கின்றீர்