T-105 2/4
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு 
அவரையே நம்பியிரு - உன் 
காரியத்தை வாய்க்கச் செய்வார் 
உன் சார்பில் செயலாற்றுவார் 
காத்திரு பொறுத்திரு 
கர்த்தரையே நம்பியிரு 
காரியத்தை வாய்க்கச் செய்வார் 
உன் சார்பில் செயலாற்றுவார் - வழியை 
1 . தீயவன் செயல் குறித்து 
மனம் பதறாதே 
புல்லைப் போல் உலர்ந்து 
பூவைப் போல உதிர்ந்து 
இல்லாமல் போய்விடும் - காத்திரு 
2 . மகிழ்ந்து களிகூரு 
தொடர்ந்து துதிபாடு 
உன் இதயத்தின் வாஞ்சை 
விருப்பங்கள் எல்லாம் 
விரைவில் நிறைவேற்றுவார் 
3 . நீதிமான் அனைவருக்கும் 
வெற்றி உண்டு வெகு விரைவில் 
துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார் 
துரிதமாய் ஜெயம் தருவார் 
4 . உனது நேர்மையெல்லாம்
அதிகாலை வெளிச்சமாகும் 
நண்பகல் போலாகும் 
உன் நீதி நியாயம் 
நண்பா கலங்காதே 
5 . கோபத்தை விட்டுவிடு 
சினம் நீ கொள்ளாதே 
பொறாமை எரிச்சல் ஒருபோதும் வேண்டாம் 
அது தீமைக்கு வழிநடத்தும்  
 
 
                            